முத்தமிழ் விழா 2010 - பொதுப்பிரிவு போட்டிகள், மாணவர் போட்டிகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்துவிட்டீர்களா?... மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதற்கான இணையப்பக்க லிங்க்கைச் சொடுக்குங்கள்..!!!!
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
தமிழவேள் கோ.சாரங்கபாணி (1903 - 1974)
தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல் சிங்அப்பூர் வந்தார். சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கண்டவர். சிங்கப்பூர்ல் தமிழ் பாடமொழியாகக் காரணமாயிருந்தார். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார். பத்திரிக்கைத் துறையில் பணியாற்றினார். தமிழவேள் 1935ல் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் வெளியீடாக “தமிழ் முரசை” வார இதழாகத் தொடங்கினார். 1936ல் சங்கம் தமிழ் முரசைத் தமிழவேளிடமே விற்றுவிட்டது. 1937ல் தமிழ்முரசு நாளிதல் ஆனது. எழுத்தாளர்களை ஊக்குவிக்க எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் உருவாக்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955ல் கோலாலம்பூர் அருள்நெறி மாநாட்டில் இவருக்கு “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார்.
 
தமிழவேள் விருது
ஆண்டுதோறும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும் தமிழவேள் விருது சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கியவிருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுவது பெரும் சிறப்பாகும். ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ் தொண்டாற்றும் ஒரு சிங்கப்பூரர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார். 1988ம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதமிழவேள் விருது பெற்றவர்கள்
1988தமிழறிஞர் திரு. மெ. சிதம்பரம்
1989கவிஞர் சிங்கை முகிலன்
1989கவிவாணர் ஐ. உலகநாதன்
1989திரு. அ. நா.மெய்தீன்
1996திரு. சே.வெ. சண்முகம்
1997திரு. ந. பழனிவேலு
1998திரு. பி. கிருஷ்ணன்
1999திரு. இக்பால்
2000திரு. இளங்கண்ணன்
2001திரு. ஜே. எம். சாலி
2001மலேசியக்கவிஞர் திரு. முரசு நெடுமாறன்
2002முனைவர் அ. வீரமணி
2003பாத்தென்றல் திரு. முருகடியான்
2004திரு. இராம. கண்ணபிரான்
2005செந்தமிழ்ச்செல்வர் திரு. வை. திருநாவுக்கரசு
2006கவிஞரேறு அமலதாசன்
2007பாத்தேறல் திரு. இளமாறன்
2008பாத்தூரல் முத்துமாணிக்கம்

" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2009
முத்தமிழ் விழா - 10 மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 10 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2010
Advertisement1
Advertisement2