பதாகை
முகப்பு நிகழ்ச்சிகள் போட்டிகள்
டாக்டர் மு.வ. நூலாய்வுப் போட்டி

டாக்டர் மு.வ. நூற்றாண்டு விழா ஆய்வரங்கு இளையர்களுக்கு நூலாய்வுப் போட்டி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தேசியக் கலை மன்றம் ஏற்பாடு செய்யும் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக டாக்டர் மு.வ. நூற்றாண்டு விழா ஆய்வரங்கை நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடத்தவிருக்கிறது. அதனை ஒட்டி மு.வ.வின் நாவல்கள் குறித்து ஆய்வுப் போட்டிக்குக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இருபத்து ஐந்து (25) வயதிற்குக் கீழுள்ள மாணவர்கள் உள்ளிட்ட சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

டாக்டர் மு.வ. எழுதியுள்ள 13 நாவல்களில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 9 நாவல்களில் ஏதாவது ஒரு நாவல் மட்டும் குறித்து நூலாய்வு செய்து அனுப்ப வேண்டும். நெஞ்சில் ஒரு முள், வாடா மலர், கயமை, செந்தாமரை, பாவை, அந்த நாள், மலர்விழி, அல்லி, மண் குடிசை ஆகியவை அந்த 9 நாவல்கள். இவற்றில் பெரும்பாலானவை தேசிய நூலகத்திலும் வட்டார நூலகங்களிலும் கிடைக்கும்.

நூலாய்வு 500 முதல் 600 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். நூலாய்வுக் கட்டுரைக்கு அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத நூலாய்வுக் கட்டுரைகள் நிராகரிக்கப்படும். நூலாய்வு செய்யப்படும் மு.வ.வின் படைப்பைப் புரிந்து கொண்ட திறன், அவர் வலியுறுத்தும் கருத்து என்ன என்பது பற்றிய தெளிவு, அது இக்காலத்திற்குப் பொருத்தமானதா இல்லையா என்ற உங்கள் கருத்து போன்றவை திறனாய்வு நோக்கில் நூலாய்வில் பதிவு செய்யப்பட வேண்டும்.

நூலாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி கதையுடன் அனுப்ப வேண்டும். அத்துடன் வயதை உறுதிப்படுத்த அடையாள அட்டையின் இருபக்க நகலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். (15.9.2012ஆம் தேதியுடன் வயது கணக்கிடப்படும்.) அந்த விவரங்கள் இல்லாத படைப்புகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டா.

அத்துடன் நூலாய்வு தங்களுடைய சொந்தப் படைப்பு என்ற உறுதிமொழிக் கடிதமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் : முதல் பரிசு $200;  2ஆம் பரிசு $100; 3ஆம் பரிசு $75; ஊக்கப் பரிசுகள் 3, ஒவ்வொன்றும் $50.

இதில் நடுவர்களின் முடிவே இறுதியானது. வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறும் மு.வ. நூற்றாண்டு விழா ஆய்வரங்கில் பரிசுகள் வழங்கப்படும்.

நூலாய்வுகளை 15.9.2012 சனிக்கிழமைக்குள் Association of Singapore Tamil Writers, BLK 723 # 13-149, Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 
மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2013 விவரங்கள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி, இவ்வாண்டு வழக்கம்போல் நடைபெற இருக்கிறது.

அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு நாளை ஒட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பரிசளிப்பு விழா நடைபெறும். சிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்று துறைகளுக்குச் சுழல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருவதால் இவ்வாண்டு சிறுகதைத் தொகுப்பு நூலுக்குப் பரிசு வழங்கப்படும்.

அதனால் 2010, 2011, 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். நூல்களை அனுப்பி வைக்க இறுதி நாள் 30.04.2013.

சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டிக்கான படிவத்திற்கு க்ளிக் செய்க: போட்டிக்கான படிவம்

போட்டிக்கான விதிகள்

நூல்களும் படிவமும் வந்து கிடைக்க வேண்டிய இறுதி நாள் = 30-04-2013

மேலும் விவரங்களுக்கு: நா.ஆண்டியப்பன் - 97849105  சுப.அருணாசலம் - 93221138

 
முத்தமிழ் விழா 2013 - மாணவர் போட்டிகள்

முத்தமிழ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி,தொடக்கநிலை 1,2 மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும்,தொடக்கநிலை 3,4 மாணவர்களுக்குக் கதை சொல்லும் போட்டியும், தொடக்கநிலை 5,6 மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி தவிர அனைத்துத் தொடக்கநிலை மாணவர் போட்டிகளுக்கும் அந்தந்தப் பள்ளி மூலமே பதிவு செய்ய வேண்டும்.அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் கடிதங்களும்,பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன.

முத்தமிழ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி,தொடக்கநிலை 1,2 மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும்,தொடக்கநிலை 3,4 மாணவர்களுக்குக் கதை சொல்லும் போட்டியும், தொடக்கநிலை 5,6 மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாலர் பள்ளி தவிர அனைத்துத் தொடக்கநிலை மாணவர் போட்டிகளுக்கும் அந்தந்தப் பள்ளி மூலமே பதிவு செய்ய வேண்டும்.அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் கடிதங்களும்,பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

போட்டி படிவம் - PAP. PCF பாலர் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் நேரடியாகப் பதிவு செய்யலாம்.அவர்கள் இந்த இணயத்தளத்தில் இருந்து படிவத்தைப் பதவிறக்கம் செய்து அதனை நிரப்பி அனுப்பி வைக்கலாம்.பதவிறக்கம் செய்ய வேண்டிய படிவம், விதிகள்பெற்றோருக்கான கடிதம்.

பல பாலர் பள்ளிகளுக்கும் கடிதங்களும், பதிவுப் படிவங்களும் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன. சாரதா பாலர் பள்ளி,சரஸ்வதி பாலர் பள்ளி,சரஸ்வதி தர்ம முனீஸ்வரர் பாலர் பள்ளி,வித்யா பாலர் பள்ளி,கிண்டர்லேண்ட் பாலர் பள்ளி,ஸ்ரீசத்யசாய் பாலர் பள்ளி,கிரைஸ்ட்சர்ச் பாலர் பள்ளி,கல்சா பாலர் பள்ளி ஆகியவை அவற்றில் அடங்கும்.அந்தப் பாலர் பள்ளிகளின் மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும்.

மேல் விவரங்களுக்கு: நா. ஆண்டியப்பன் (தலைவர்) - 97849105 சுப. அருணாசலம் (செயலாளர்) - 93221138 இராம. வயிரவன்(பொருளாளர்) - 93860497 கா. பாஸ்கர் - 90081573 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

 
முத்தமிழ் விழா 2013 - பொதுப்பிரிவுப் போட்டிகள்

சிறுகதை, கவிதைப் போட்டிகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்தமிழ் விழாவை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ் விழாவின் ஒரு பகுதியாக இவ்வாண்டும் நடத்தவிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி நடைபெறும் முத்தமிழ் விழாவை முன்னிட்டு இவ்வாண்டும் வழக்கம்போல் பொது மக்களுக்குச் சிறுகதை, கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பரிசுகள் - சிறுகதை

முதல் பரிசு $300; 2ஆம் பரிசு $200; 3ஆம் பரிசு $100. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $75.

பரிசுகள் - கவிதை

முதல் பரிசு $200; 2ஆம் பரிசு $100; 3ஆம் பரிசு $75. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50.

சிறுகதைக்கான விதிகள்

கதைக் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதைகள் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருக்க வேண்டும். கதைகள் 1,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 1,400 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 3 கதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கதைக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத கதைகள் நிராகரிக்கப்படும்.

கவிதைக்கான விதிகள்

கவிதைகள் மரபுக் கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ இருக்கலாம். கவிதை எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர்ச் சூழலில் இருக்க வேண்டும். கவிதைகள் 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும். ஒருவர் அதிகப்டசமாக 3 கவிதைகள் அனுப்பலாம். ஒவ்வொரு கவிதைக்கும் அசல் ஒன்றுடன் மூன்று நகல்கள் (1+3) கட்டாயம் அனுப்ப வேண்டும். 4 பிரதிகள் இல்லாத கவிதைகள் நிராகரிக்கப்படும்.

பொதுவான விதிகள்

சிங்கப்பூரின் அடையாள அட்டை (IC, Employment Pass. S Pass, Work Permit) வைத்துள்ள யாரும் போட்டிகளில் பங்கேற்கலாம். எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் மடடும் போட்டிகளில் பங்கேற்க முடியாது. கதைகளும் கவிதைகளும் எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ மற்ற விவரங்களோ எழுதக் கூடாது. பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனித் தாளில் எழுதி கதையுடன் அனுப்ப வேண்டும். அத்துடன் அடையாள அட்டையின் இருபக்க நகலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த விவரங்கள் இல்லாத படைப்புகள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டா. படைப்புகளைக் கூடியவரை கணினியில் அச்சிட்டு அனுப்ப வேண்டும். எழுதிய அனுப்பினால் கையெழுத்து, புரியும்படி தெளிவாக இருக்க வேண்டும்.

சிறுகதையோ, கவிதையோ தன்னுடையதுதான் என்றும் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்றும் உறுதிக் கடிதம் இணைக்கப்பட வேண்டும். போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.

சிறுகதைகளையும் கவிதைகளையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், BLK 723 # 13-149,Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கு 15.03.2013க்குள் வந்து கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேல் விவரங்களுக்கு சுப. அருணாசலம் – 93221138; இராம. வயிரவன் – 93860497; கா. பாஸ்கர் – 90081573 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். www.singaporetamilwriters.com  இணையத் தளத்தையும் பார்க்கலாம்.

 
கண்ணதாசன் விழா - 2012 பாட்டுத் திறன் போட்டி விவரங்கள்

'கண்ணதாசன் விழா 2012' - பாட்டுத் திறன் போட்டிகள் இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கின்றன.

போட்டி நாள்: 9-9-2011

பதிவு செய்ய இறுதி நாள்: 31-8-2012

பதிவிறக்கம் செய்ய வேண்டிய DOC படிவம்

16 வயதிற்குக் கீழுள்ளவர்களுக்கு தனிக்குரல் பிரிவாகவும், 16 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு இருகுரல் பிரிவாகவும் போட்டி நடத்தப்படும். விதிமுறைகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய க்ளிக் செய்க - பாட்டுத்திறன் போட்டி விதிகள் .


 

 


பதாகை
பதாகை
பதாகை



Copyright © 2011 singaporetamilwriters.com