முத்தமிழ் விழா 2013
இவ்வாண்டு முத்தமிழ் விழா கடந்த 7.4.2012 சனிக்கிழமை சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். மூத்த எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான திரு. எஸ். எஸ். சர்மாவுக்குத் தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தின் வாணியம்பாடி இசுலாமியக் கல்லுாரி தமிழ்த் துறையின் முன்னைய தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் “விழித்தால் விடியும்” எனும் தலைப்பில் அருமையாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார். பாலர் பள்ளி, தொடக்கநிலை 1 & 2 வகுப்புகளுக்கான மாறுவேடப் போட்டியின் இறுதிச் சுற்று அனைவரையும் கவர்ந்த மற்றோர் அம்சம். கதை சொல்லும் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை படைக்கும் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்கள் தங்கள் ஆற்றலை மேடையில் அரங்கேற்றினர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பொதுப் பிரிவில் சிறுகதை. கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டுப் போட்டிகளில் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முத்தமிழ் விழா 2013 படங்கள் |
நிகழ்ச்சிகள்








